பகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் கிடைக்கும்: எம்எல்ஏ நரேந்திரா தகவல்
2020-12-03@ 04:39:17

சாம்ராஜ்நகர்: பகுகிராம குடிநீர் திட்டத்தின் கீழ் 247 கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கும் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எம்.எல்.ஏ நரேந்திரா தெரிவித்தார். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பல கிராமங்கள் மாவட்டத்தின் வனப்பகுதியையொட்டி இருக்கும் பழங்குடியின மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களாகும். இந்த கிராமங்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. போர்வெல் மற்றும் கிணற்று நீரை இவர்கள் குடித்து வந்தனர். இதனால் வெயில் காலங்களில் மலைவாழ் கிராம மக்கள் தண்ணீர் தேடி அலையும் நிலை இருந்தது.
இதன் காரணமாக, வனப்பகுதியையொட்டிய கிராம மக்கள் குடி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை குறித்து எம்.எல்.ஏ நரேந்திரா அரசுக்கு மனு அளித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தும் பகுகிராம குடிநீர் திட்டத்தின் கீழ் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் முதல்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் ஹனூர் தொகுதியில் உள்ள 247 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக எம்.எல்.ஏ நரேந்திரா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட முதல் கட்டப்பணிகள் அடுத்தாண்டுக்குள் முடிக்கப்பட்டு இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்படும் என்றார்.
Tags:
Uninterrupted drinking water project for 247 villages soon பகுகிராம குடிநீர் திட்டத்தில் விரைவில் 247 கிராமங்களுக்கு தடையில்லா குடிநீர் எம்எல்ஏ நரேந்திரா தகவல்மேலும் செய்திகள்
சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை: RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்கு தான் உச்சபட்ச அதிகாரம்: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்
நடுவானில் மூச்சு திணறல் 7 வயது உபி சிறுமி பலி
தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை?
அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்: மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி
விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்; மத்திய அரசு மனு வாபஸ்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்