கடலில் படகு கவிழ்ந்து விபத்து காணாமல் போனவர்களில் மேலும் இருவர் சடலமாக மீட்பு: மற்றவர்களை தேடும் பணி தீவிரம்
2020-12-03@ 04:34:06

மங்களூரு: மங்களூரு அருகேயுள்ள போலார் கிராமத்தை சேர்ந்த மீன்பிடி தொழில் செய்யும் ஒருவருக்கு சொந்தமான ஸ்ரீரக்சா என்ற படகில் கடந்த திங்கட்கிழமை காலை மீனவர்கள் குழுவாக அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றனர். கடலில் சுமார் 25 கி.மீட்டர் தூரம் வரை சென்ற அவர்கள் காலை முதல் மாலை வரை மீன் பிடித்துள்ளனர். இதில் அதிகளவு மீன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மீன்களை படகில் ஏற்றிக் கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தில் சிக்கிய படகு நிலை தடுமாறி தண்ணீரில் கவிழ்ந்தது. படகில் அதிகளவு மீன்கள் இருந்ததால் அதிக பாரத்தால் படகு தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. உடனே மீனவர்கள் மீன்களை கடலுக்குள் கொட்டிவிட்டு படகை மீட்க முயற்சித்தனர். ஆனால் படகு அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. இதனால் செய்வதறியாத மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி தப்பிக்க முயன்றனர்.
மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் நீண்டநேரமாகியும் கரைக்கு வராததால் படகின் உரிமையாளர் வயர்லஸ் மூலம் மீனவர்களை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் படகு உரிமையாளர் வேறு ஒரு படகில் சில மீனவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் சென்றபோது மீனவர்களின் படகு விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த படகு விபத்தில் சிக்கி பாண்டுரங்கா சரவணா(58), பிரீதம்(25) ஆகிய மீனவர்கள் உயிரிழந்தனர். இதில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 16 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மேலும் 6 மீனவர்கள் காணாமல் போயினர். இதுகுறித்து தகவலறிந்த கடலோர மீட்பு படையினர் காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சந்தன்(21), உசேன்நார்(25) ஆகிய மேலும் இரண்டு மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Tags:
Boat at sea capsize accident rescue of two corpses others the intensity of the search கடலில் படகு கவிழ்ந்து விபத்து இருவர் சடலமாக மீட்பு மற்றவர்களை தேடும் பணி தீவிரம்மேலும் செய்திகள்
அச்சப்பட தேவை இல்லை...சசிகலாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.: டிடிவி தினகரன் பேட்டி
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தலைவர்கள் இதயம் கனிந்த வாழ்த்து..!!
இந்தியாவில் கொரோனா: மேலும் 15,223 பேர் பாதிப்பு: 151 பேர் உயிரிழப்பு
சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை: RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதிக்கு தான் உச்சபட்ச அதிகாரம்: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்
நடுவானில் மூச்சு திணறல் 7 வயது உபி சிறுமி பலி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்