மார்க்சிஸ்ட் கட்சியின் பேரவைக்கூட்டம்
2020-12-03@ 02:29:26

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் இ.சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவை இரண்டாகப் பிரிப்பது என கட்சியின் மாநிலக் குழு முடிவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைநகர் டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு டிசம்பர் 4 முதல் தொடர் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழகத்தில் 162 இடங்கள் வரை வெற்றிபெற்று திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்
பரபரப்பான தேர்தல் களம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தேர்தல் குழு ஆலோசனை..!
ஆண்டிபட்டியில பிரசாரம்பா...அயிரையை ரெடி பண்ணிரு...!
எங்க கட்சி ஆட்சிக்கு வந்தா 4 துணை முதல்வரை உருவாக்குவேன்: நேற்று கட்சி ஆரம்பிச்ச அர்ஜுனமூர்த்தி அலப்பறை
பறக்கும்படை குழுவில் உள்ளூர் வீடியோகிராபர்களுக்கு ‘நோ என்ட்ரி’
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!