அதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை : இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி
2020-12-03@ 02:27:45

வாஷிங்டன்: கடந்த அக்டோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை செய்வதற்காக அமெரிக்க அரசு எச்1 பி விசாக்களை வழங்கி வருகின்றது. கொரோனா நோய் தொற்று பாதிப்பின் விளைவாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உறுதி செய்வதற்காக எச்-1 பி விசாக்களுக்கு கடந்த அக்டோபரில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள அளவீட்டில் மாற்றம் மற்றும் சிறப்பு வேலை பிரிவில் பல முக்கிய பிரிவுகளை நீக்கவும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து அமெரிக்க வர்த்தக மையம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு விசாரணையின்போது, எச் 1பி விசா தொடர்பான அரசு மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு போதுமான அறிவிப்பு இல்லை என்றும் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் அமெரிக்காவுடன் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்பு துண்டிக்கபப்டும் அபாயம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்பி வொயிட், ‘‘அரசானது வெளிப்படைத்தன்மை நடைமுறைகளை பின்பற்றவில்லை. அரசு கொண்டு வந்த இந்த மாற்றங்கள் தொற்று நோய் கால பாதிப்புக்கான அவசரகால நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் டிரம்ப் நிர்வாகம் இதுகுறித்து சில காலமாக கூறிவந்தது. ஆனால் அக்டோபரில் தான் விதிகளை வெளியிட்டது. எனவே டிரம்ப் அரசு கொண்டு வந்த தொழிலாளர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகளால் கொண்டுவரப்பட்ட எச்1 பி விசா தொடர்பான இரண்டு விதிகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது” என உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் எச்1பி விசா மூலம் அதிகம் பயனடைந்து வரும் இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் 46வது அதிபராக இன்று பதவியேற்கிறார் ஜோ பிடென்
பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
அவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்
அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!