கஞ்சா விற்ற டிரைவர் கைது
2020-12-02@ 00:40:26

திருநின்றவூர்: திருநின்றவூர் லலிதாஞ்சலி நகர், ரைஸ் மில் அருகில் கஞ்சா விற்பதாக திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் எஸ்.ஐ.ஆனந்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்துக்கு இடமான சுற்றிக் கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்துப்பிடித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறினார். அவரது பேன்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதன் எடை 1.100 கிராம். விசாரணையில், திருநின்றவூர் அம்மன் நகர், சூரத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த தினகரன்(27), ஆட்டோ டிரைவர் என தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைதுசெய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது
மருமகன் கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுக்கு பின் மாமியார் கைது
மெக்கானிக் கடையில் பணம் திருடிய காதலர்கள் கைது
வேலை வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் சிக்கினார்
டெய்லர் வீட்டில் 15 சவரன் கொள்ளை
கடை ஷட்டரை உடைத்து 7 செல்போன்கள், ரூ.40 ஆயிரம் கொள்ளை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!