மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
2020-12-01@ 11:36:39

டெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வகைசெய்ய இயலுமா என சட்ட அமைச்சகம் கேட்டதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு வகையான ஆலோசனைகளை மத்திய சட்ட அமைச்சகமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் நடத்தி வந்தன. இதுதொடர்பாக புதிய சட்டம் கொண்டு வருவதற்காக மத்திய சட்ட அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இந்திய தேர்தல்களை நடத்துவதற்கான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ள மத்திய சட்ட அமைச்சகம் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வகைசெய்ய இயலுமா என கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இதுகுறித்து பதில் அளித்த தேர்தல் ஆணையம்,; வெளிநாடுவாழ் இந்தியர்களை இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வைப்பது சாத்தியம் தான், அதற்கான வழிமுறைகள் தங்களிடம் உள்ளது என தெரிவித்துள்ளது. வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலிலேயே அதனை அமல்படுத்த தயாராக இருக்கிறோம். தமிழகத்துடன் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் இதனை செயல்படுத்த தயராக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தல்!: மொத்த இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி..பாஜக-வுக்கு படுதோல்வி..!!
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது!: ராகுல்காந்தி
மேற்கு வங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,989 பேர் கொரோனாவால் பாதிப்பு: 98 பேர் உயிரிழப்பு
நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30' திட்டம் தொடக்கம்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்