எப்சி புதுப்பிக்க புதிய விதிமுறை நீக்காவிட்டால் லாரிகள் ஸ்டிரைக்: மாநில செயலாளர் பேட்டி
2020-12-01@ 00:03:19

நாமக்கல்: லாரிகளுக்கு எப்சி புதுப்பிக்க புதிய விதிமுறைகளை நீக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார். லாரிகளுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்கும்போது வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர், ஜிபிஎஸ் கருவி போன்றவற்றை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்கவேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் போக்குவரத்து ஆணையர் தனது உத்தரவை திரும்ப பெறவில்லை.
இதையடுத்து, நேற்று தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதன்படி, நாமக்கல்லில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கதலைவருமான வாங்கிலி, ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கதலைவர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் நேற்று நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிசந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் மாநில செயலாளர் வாங்கிலி கூறியதாவது: போக்குவரத்து ஆணையரின் உத்தரவு லாரி உரிமையாளர்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் லாரிகளுக்கு எப்சி செய்யும் போது கூடுதல் செலவு ஏற்படுகிறது. தரச்சான்று பெற்ற நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் போது, குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் கருவிகளை மட்டும் வாங்கவேண்டும் என லாரி உரிமையாளர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறவேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்றார். இதேபோல், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க (சிம்டா) பொதுச்செயலாளர் சண்முகப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் வேககட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பது நடைமுறையில் இல்லை. லாரி உரிமையாளர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட வேண்டும். 3 புதிய விதிமுறைகளையும் திரும்ப பெறவேண்டும் என கூறியுள்ளார்.
Tags:
To renew the FC if the new rule is not removed Trucks Strike interview with Secretary of State எப்சி புதுப்பிக்க புதிய விதிமுறை நீக்காவிட்டால் லாரிகள் ஸ்டிரைக் மாநில செயலாளர் பேட்டிமேலும் செய்திகள்
தேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!
வாய்ப்பு முன்னாள் அமைச்சருக்கா? இந்நாள் எம்எல்ஏவுக்கா? செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி
ஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு
கொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சட்டமன்ற தேர்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!