சட்டம் அமலான மறுநாளே அதிரடி திருமண கட்டாய மத மாற்றம் உபி.யில் முதல் வழக்குப்பதிவு
2020-11-30@ 03:51:09

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மத மாற்ற சட்டம் அமல்படுத்தப்பட்ட மறுநாளே, இச்சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்காக கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்கான அவசரச் சட்டம், உத்தரப் பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு நேற்று முன்தினம்தான் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்தார். இது அமலுக்கு வந்த மறுநாளே, இச்சட்டத்தின் கீழ் நேற்று முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் சட்டத்தின் கீழ், பரெய்லி மாவட்டத்தில் உள்ள தியோரனியா காவல் நிலையத்தில் ஓவைஸ் அகமது என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரெய்லியில் தனது மகளை ஓவைஸ் குடும்பத்தினர் அவருடைய விருப்பத்திற்கு மாறாக இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி அழுத்தம் கொடுப்பதாகவும், குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஓவைஸ் அகமது மீது கட்டாய மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகி விட்ட அவரை கைது செய்ய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Tags:
The day after the law came into force action marriage forced conversion UP. First case சட்டம் அமலான மறுநாளே அதிரடி திருமண கட்டாய மத மாற்றம் உபி. முதல் வழக்குப்பதிவுமேலும் செய்திகள்
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி..! நாட்டு மக்கள் தயக்கத்தில் இருந்து வெளிவர உதவும்: எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு...!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பீகார் அரசு: மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்....முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!!!
ஆளுங்கட்சியின் முறைகேடு, அராஜகங்களை கண்டித்து திருப்பதி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா!: போலீசாரிடம் ஆவேசம்..!!
“தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லை”... புதுச்சேரி செவிலியரை புன்னகையுடன் பாராட்டிய பிரதமர் மோடி...!..
பக்க விளைவுகள் மிகக் குறைவு: எம்.பி., எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினரும் கொரோனா தடுப்பூசி போட்டுகங்க: மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்