நாகாலாந்து மாநிலத்தில் நாய் இறைச்சி தடை உத்தரவு நிறுத்திவைப்பு
2020-11-29@ 20:51:03

கவுகாத்தி: நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த அரசின் உத்தரவை, அம்மாநில உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நாய் இறைச்சி விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால், சிக்கிம் போன்ற மாநிலங்கள் நாய் இறைச்சிக்கு தடை விதித்துள்ளன. சமீபத்தில் நாகாலாந்து அரசும் கடந்த ஜூலை 2ம் தேதி நாய் இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்தது. அதில், நாய் இறைச்சியை வணிக நோக்கில் இறக்குமதி செய்தல், உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டது.
மேலும், நாய்கள் இறைச்சி தடை தொடர்பாக அரசின் உத்தரவை எதிர்த்து, கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், செப். 14ம் தேதிக்குள் நாகாலாந்து அரசு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இவ்வழக்கு தொடர்பாக பதிலளிக்காததால், அரசின் தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல்
அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
புதிய கொரோனா 60 நாட்டில் பரவியது
அலிபாபா தலைவர் ஜாக் மா வீடியோவில் தோன்றி பேச்சு: மாயத்துக்கு காரணம் கூறாமல் மவுனம்
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!