கலசபாக்கம் தொகுதியில் முகாமில் தங்கியுள்ள 510 குடும்பங்களுக்கு நிவாரணம்
2020-11-29@ 20:28:23

கலசபாக்கம்: நிவர் புயல் மழை காரணமாக, கலசபாக்கம் தொகுதியில் 36 சிறப்பு முகாம்களில் 510 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், வேட்டி- சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முகாம்களில் தங்கியுள்ள 510 குடும்பங்களுக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் நிவாரண பொருட்களை வழங்கினார். இதையொட்டி, கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா சுதாகர் வரவேற்றார். இதில் போளூர் வீட்டுவசதி கடன் சங்க துணைத்தலைவர் பொய்யாமொழி, வக்கீல் செம்பியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் அன்பழகன் நன்றி கூறினார். முன்னதாக, கேசவபுரம் கிராமம் வழியாக எம்எல்ஏ சென்று கொண்டிருந்தபோது, மழையால் சாய்ந்த மின்கம்பத்தை தூக்கி நிறுத்த மின்வாரிய ஊழியர்கள் போராடி கொண்டிருந்தனர். இதை கவனித்த எம்எல்ஏ, மின்வாரிய ஊழியர்களுக்கு உதவியாக மின்கம்பத்தை தூக்கி நிறுத்தினார்.
மேலும் செய்திகள்
கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து விழுந்தது மின்கம்பங்கள்: கரன்ட் இல்லாமல் மக்கள் கடும் அவதி
பொங்கல் விளையாட்டு போட்டிக்கு அனுமதி மறுப்பு வடமதுரை அருகே சாலை மறியல்
கொடைக்கானலில் மழைக்கு 10 வீடுகள் இடிந்து சேதம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை பொங்கல் விழா
தொட்டபெட்டாவில் பனிமூட்டம் இயற்கை காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கெலமங்கலம் அருகே யானைகள் அட்டகாசத்தால் தக்காளி தோட்டம் நாசம்: விரட்டியடிக்க கோரிக்கை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்