உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் விலக்கு பெற தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: வைகோ கேள்வி
2020-11-29@ 01:33:30

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: மத்திய பாஜ அரசின் வஞ்சகத்தால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1922 முதுநிலை மருத்துவ இடங்களிலும், 369 உயர் சிறப்பு மருத்துவ இடங்களிலும் தமிழகத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் முழுமையாக இடம் பெறும் வாய்ப்பு பறி போய் இருக்கிறது. தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று ((INI-CET)) நுழைவுத்தேர்வு ஏஐஎம்எஸ், ஜிப்மர், பிஜிஐ சண்டிகர் போன்றவற்றிக்கு பாஜ அரசு நீட்டிலிருந்து எப்படி விலக்கு அளித்து இருக்கிறதோ அதைப் போன்று உயர்
சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் விலக்கு பெற எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மருத்துவக் கல்வியில் தமிழகத்தின் உரிமைகளை பலி கொடுத்து வரும் அதிமுக அரசின் கையறுநிலை கடும் கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Why did the Tamil Nadu government not take action to get exemption for higher studies medical studies ? Vaiko question உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு விலக்கு பெற தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வைகோ கேள்விமேலும் செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ 3; மமக 2 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.!!!
தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க வரும் 3-ம் தேதி கடைசி நாள்...ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!!!!
மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு
தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது; பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது: எல்.முருகன் பேட்டி
அதிமுக கூட்டணியில் விரிசல்?.. மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?.. பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை
தமிழகம் நாட்டின் வழிகாட்டி; காமராஜர் முயற்சியால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம்: ராகுல் காந்தி பேச்சு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்