3 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் சமுதாய கூட கட்டுமான பணிகள்
2020-11-28@ 13:00:53

ஈரோடு: ஈரோட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் சமுதாய கூட கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஈரோடு பெரியார் நகர், மாணிக்க விநாயகர் கோவில் வீதியில் மாநகராட்சி சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு தளங்களுடன் கூடிய சமுதாய கூடம் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் கட்ட தீர்மானிக்கப்பட்ட நிலையில், ரூ.70 லட்சம் மதிப்பிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள பணிகளை முடிக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து 3 ஆண்டுகளாக பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால், இந்த கட்டிடம் தற்போது இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருவதாக குற்றம் சாட்டி உள்ள அப்பகுதி மக்கள் பணிகளை முழுமையாக முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
திருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
ஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்..! ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
குடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்