ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியது கிரெடிட் கார்டு தேவை கிடுகிடு விண்ணப்ப எண்ணிக்கை உயர்வு
2020-11-28@ 00:44:56

புதுடெல்லி: சிபில் நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த அக்டோபர் மாதம் புதிய கிரெடிட் கார்டு கோரி வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 2019ம் ஆண்டு அக்டோபரை விட 106 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மெட்ரோ அல்லாத நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கிரெடிட் கார்டு தேவைப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என தெரிய வந்துள்ளது.
வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பம் செய்யும்போது, ஒவ்வொரு விண்ணப்பமும் சிபில் ஸ்கோர் கேட்டு, சிபில் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. ஊரடங்கிற்கு பிறகு கடந்த ஏப்ரலில் இவ்வாறு வரும் விண்ணப்பங்கள் முந்தைய ஆண்டு ஏப்ரலை விட 5 சதவீதம் குறைந்திருந்தது. அதன்பிறகு ஜூலை மாதத்தில் விண்ணப்பங்கள் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்தது. இருப்பினும் 2019ம் ஆண்டு ஏப்ரலில் வந்த எண்ணிக்கையில் 61 சதவீதம் மட்டுமே. ஊரடங்கிற்கு முந்தைய அளவுக்கு விண்ணப்பங்கள் கடந்த மாதம்தான் அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
இனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்