திருவண்ணாமலை தீபத்திருவிழா - கொரோனாவால் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு
2020-11-27@ 18:47:30

தி.மலை: திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
28, 29, 30ஆம் தேதிகளில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி இல்லை:
நவம்பர் 29ஆம் தேதி திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்று கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நவம்பர் 29-ஆம் தேதி காலை 04.00 மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழா அன்று மலை மீது பக்தர்கள் செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சாமி வீதியுலா நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:
திருவண்ணாமலைமேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்