ரூ.15 கோடி செல்போன் கொள்ளையில் திரிபுராவை சேர்ந்தவர் கைது
2020-11-27@ 00:48:15

ஓசூர்: காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியை வழிமறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ஒரு கும்பல் மடக்கி, 2 டிரைவர்களை தாக்கி விட்டு, செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. இதில், மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான் ஜா தலைமையிலான கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. தனிப்படையினர் ம.பி சென்று பரத் தேஜ்வாணியை(37) கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், மேற்கு திரிபுராவில் பதுங்கியிருந்த அமிதாபா தத்தா(36) என்பவன் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளான். மற்றவர்களை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கொள்ளை போன செல்போன்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பொதுமக்கள் கண்முன் கேபிள் டிவி ஆபரேட்டர் சரமாரி வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்; எம்எல்ஏ வீட்டு அருகே பரபரப்பு
போக்சோவில் டிரைவர் கைது
நகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ் சீருடையில் ரூ.80 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்: தக்கலை அருகே பரபரப்பு சம்பவம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு சிறை: மகிளா நீதமன்றம் உத்தரவு
பைக்கில் மணல் கடத்தல்; 2 பேர் கைது
உ.பிக்கு ரூ.85 லட்சம், தங்க நகை கடத்த முயற்சி சென்னையைச் சேர்ந்த சுங்க அதிகாரி கைது
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!