நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2020-11-27@ 00:47:44

சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு என 204 புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதில், பெண்கள், தேர்வுக்கு செல்பவர்கள், மாணவர்கள், வியாபாரம் செய்யும் பெண்கள் என அனைவரும் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக பயணிகள் ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களுக்கு ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி, நேற்று முன்தினம் காலை 10 மணி வரைக்கும் சில மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், அதில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் இல்லை. இந்நிலையில், நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மரக்காணம் - புதுச்சேரி இடையே கரையை கடந்ததால் நேற்று வழக்கம் போல் 3 மணி நேரத்திற்கு பிறகு மின்சார ரயில்கள் இயக்கப்படும், என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இயல்வு வாழ்க்கை திரும்பி அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படும் பட்சத்தில் ஏற்கனவே இயக்கப்பட்ட 204 சிறப்பு மின்சார ரயில்களும் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:
Nivar storm cancellation suburban trains resumption Southern Railway announcement நிவர் புயல் ரத்து புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்புமேலும் செய்திகள்
அண்ணணும் கிடையாது.. தம்பியும் கிடையாது சசிகலாவை உயர்த்தி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
பொங்கல் பண்டிகைக்கு பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகத்துக்கு 5.46 கோடி வருவாய்: 5.6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
நலிவடைந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படுமா?
தாமதம் செய்யும் உணவுத்துறை அதிகாரிகளால் தண்டனை பெறும் ரேஷன் கடை பணியாளர்கள்: தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விக்டோரியா பொது மண்டபம் 40 கோடி செலவில் புனரமைப்பு: விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்
இசிஐ சென்னை பேராயத்தின் முதல் பெண் பேராயராக கதிரொளி மாணிக்கம் தேர்வு
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்