பட்டாபிராமில் 30 மணி நேர மின்தடை
2020-11-27@ 00:47:09

பட்டாபிராம்: ஆவடி மின்வாரிய கோட்டத்தில் பட்டாபிராம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் “நிவர்” புயலை முன்னிட்டு மின்தடை செய்யப்பட்டது. மேலும், புயல் கரையை கடந்த பிறகு, மின் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். ஆனாலும், நேற்று காலை முதல் மாலை வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். மேலும், மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பிறகு, அப்பகுதி மக்கள் போராட்டம் செய்வதாக அறிவிப்பு கொடுத்தனர். இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நேற்று இரவு 7 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்தனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
4வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கு நெல்லை, தூத்துக்குடியில் மிதக்கும் குடியிருப்புகள்: தண்ணீரை வெளியேற்ற கோரி 4 இடங்களில் சாலைமறியல்
பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் 180வது பிறந்தநாள் விழா
அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்.! 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம்: அலங்காநல்லூர், சிராவயலில் இன்று களை கட்டுகிறது
பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியளவில் நிறைவு: 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்..!!
அதிமுக ஒப்பந்ததாரரால் கட்டப்பட்ட குடவாசல் அரசு பெண்கள் பள்ளி இடிந்து விழுந்தது: திறப்புக்கு முன் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய பெற்றோர் கோரிக்கை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்