ஐஎஸ்எல் தொடரில் முதல்முறையாக களமிறங்கும் ஈஸ்ட் பெங்கால்
2020-11-27@ 00:45:48

பன்ஜிம்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் முதல்முறையாக எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி இன்று களமிறங்குகிறது. இந்தியாவில் பழமையான கால்பந்து கிளப்களில் ஒன்று ஈஸ்ட் பெங்கால். சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு 1920ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபலமான கால்பந்து கிளப்களான ஈஸ்ட் பெங்கால்-மோகன் பகான் போட்டிகள் அனல் பறக்கும். இரண்டு கொல்கத்தாவை சேர்ந்த அணிகள் என்றாலும் ரசிகர்களிடம் மோதலுக்கு பஞ்சமிருக்காது. இதில் மோகன் பகான் கடந்த ஆண்டு ஐஎஸ்எல் அணியான அத்லெடிகோ டி கொல்கத்தா (ஏடிகே) உடன் இணைந்து விட்டது. அதனால் ஏடிகே மோகன் பகான் என்ற பெயரில் ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், எஸ்சி ஈஸ்ட் பெங்கால் இந்த ஆண்டுதான் ஐஎஸ்எல் தொடரில் இணைந்துள்ளது. தனது முதல் போட்டியிலேயே தனது பரம எதிரியான மோகன் பகானை எதிர்கொள்ள உள்ளது. இன்று வாஸ்கோவில் இந்தப் போட்டி நடக்கிறது. ஐஎஸ்எல் அணிகளில் குறைந்த அளவு வெளிநாட்டு வீரர்கள் கொண்ட அணியாகவும் ஈஸ்ட் பெங்கால் அணி இருக்கிறது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 45 போட்டிகளில் 18 போட்டிகளில் ஈஸ்ட் பெங்காலும், 14 போட்டிகளில் மோகன் பகானும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 13 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. ஐஎஸ்எல் தொடரை பொறுத்தவரை அனுபவ அணி ஏடிகே மோகன் பகானும், அறிமுக அணி எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியும் முதல்முறையாக மோதும் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
For the first time in the ISL series the bang East Bengal ஐஎஸ்எல் தொடரில் முதல்முறையாக களமிறங்கும் ஈஸ்ட் பெங்கால்மேலும் செய்திகள்
இங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு
‘கபா’ கோட்டை தகர்ப்பு: பிரிஸ்பேனில் இந்தியா வரலாற்று சாதனை; ஆஸி.யின் 32 ஆண்டு ஆதிக்கத்துக்கு ஆப்பு!; பார்டர் - கவாஸ்கர் டிராபி தக்கவைப்பு; சாதித்தது இளம் படை
வெற்றி கோப்பையை பெறுவதற்கு முன் நேதன் லயனை கெளரவப்படுத்திய ரஹானே..! இதயங்களை வென்ற இந்திய கேப்டன்
ஒருபோதும் இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்...! ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம்
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ : பிரதமர் மோடி வாழ்த்து
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக கைப்பற்றியது இந்தியா
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!