கும்பல் தாக்குதலை சமாளிக்க தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ்காரர்
2020-11-27@ 00:26:25

புதுடெல்லி: கார் பார்க்கிங் செய்வது தொடர்பான புகாரை விசாரிக்க சென்றபோது உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்ட கான்ஸ்டபிள் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோகினி பகுதியில் வசிக்கும் முதியோர் தம்பதிக்கும், அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுபற்றி போலீசில் முதியோர் தம்பதி புகார் அளித்தனர். இதனை விசாரிப்பதற்காக கான்ஸ்டபிள் புனித் சர்மா என்பவர் அங்கு சென்று விசாரித்தார். அப்போது, முதியோர் தம்பதி வசிக்கும் அடுக்குமாடி வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் தம்பதி கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவ்வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்ட காரை அப்புறப்படுத்த கோரியதை ஏற்காமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்து சர்மாவிடம் தகராறு செய்தனர்.
ஒருகட்டத்தில் அவர்கள் சர்மாவை தாக்கியததால், தற்காப்பு கருதி சர்வீஸ் பிஸ்டலை எடுத்து தரையில் நான்கு ரவுண்டு சுட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், சர்மாவிடம் இருந்த துப்பாக்கி, செல்ேபான், கார் சாவி ஆகியவற்றை பறிக்க முயன்றனர். இந்த களேபரத்தில் சர்மா சுட்டதில் பெண் ஒருவரின் காலில் குண்டுபாய்ந்தது. இதையடுத்த அவர் அவசரமாக அருகிலுள்ள பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சர்மாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ விசாரணையில் அவர் மது அருந்தவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அரசு ஊரியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக துணை கமிஷனர் ஆர்கே சிங் கூறினார்.
மேலும் செய்திகள்
கவர்னர் தமிழிசை நேரடி கவனிப்பு: 31 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்...ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்!!!!
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்