நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரிய பாதிப்புகள் இல்லை: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி பேட்டி
2020-11-26@ 10:21:41

கடலூர்: நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரிய பாதிப்புகள் இல்லை என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்தார். கடலூரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகறிது என கூறினார். நிவர் புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய தொடங்கியவுடன் மதிப்பீடு செய்யும் பணி துவங்கும் என கூறினார். பயிர்களை பொறுத்தவரை 2 நாட்களுக்கு பிறகு தான் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும் என தெரிவித்தார். நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவி்ல்லை என கூறினார்.
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல்வேறு பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார். விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி, மங்கலம்பேட்டை, ஆலடி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், மரங்கள் அகற்றப்பட்டதுடன் மின் இணைப்பு சீர் செய்யப்படும் என கூறினார். மேலும் கடலூரில் நிவார் புயலால் ஏற்பட்ட பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
மேலும் செய்திகள்
வாக்களர்களின் பிள்ளைகளுக்கு லஞ்சமா?: தஞ்சையில் ஜெயலலிதா, எடப்பாடி உருவ படம் பதித்த இலவச புத்தக பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்!!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின!: தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
வனப்பகுதி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி வழக்கு
யாரிடமும் நாம் கெஞ்சவில்லை தேமுதிகவிடம்தான் அதிமுக கெஞ்சுகிறது: எல்.கே.சுதீஷ் கெத்து
கொடைக்கானலில் காட்டுத்தீ
துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்