கேரள அரசின் அவசர சட்டம் முறைப்படி வாபஸ்: கவர்னர் கையெழுத்திட்டார்
2020-11-26@ 00:52:36

திருவனந்தபுரம்: சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்துக்கள் மற்றும் தனிநபருக்கு எதிராக மிரட்டல் விடுப்பவர்களுக்கு எதிராக கேரளாவில் கடந்த சிலநாட்களுக்கு முன் அவசர சட்டம் கொண்டுரவப்பட்டது. இதன்படி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இந்த புதிய சட்டத்தின்படி பத்திரிகை மற்றும் டிவிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு கேளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேசிய அளவிலும் பல தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு ெதரிவித்தனர்.
இதையடுத்து இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் பினராய் விஜயன் கூறினார். இந்த சட்டத்தில் கவர்னர் கையெழுத்து போட்டதால் சட்டத்தை வாபஸ் பெறும்போதும் கவர்னர் கையெழுத்து போட வேண்டும். இதையடுத்து இந்த அவசர சட்ட வாபஸ் மசோதா நேற்று கவர்னரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த கவர்னர் ஆரிப் முகமதுகான் கையெழுத்து போட்டார். இதையடுத்து சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும் செய்திகள்
FasTag முறையால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்!: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!!
சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்