கொடுமுடி அருகே பரிதாபம்: கார் கவிழ்ந்து அண்ணன், தம்பி உள்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு
2020-11-25@ 16:40:03

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த வீரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகுநாத் (45), தாமோதரன் (50), கிருஷ்ணசாமி (52), முருகசாமி (55). இவர்கள் 4 பேரும் டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தனர். இதில் தாமோதரன், கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் அண்ணன், தம்பி ஆவர். டெக்ஸ்டைல் தொழில் சம்பந்தமாக நூல் வாங்குவதற்கு கரூர் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மதியம் 4 பேரும் பெருந்துறையில் இருந்து காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் கொடுமுடி அடுத்த பள்ளக்காட்டூர் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
தேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!
வாய்ப்பு முன்னாள் அமைச்சருக்கா? இந்நாள் எம்எல்ஏவுக்கா? செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி
ஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு
கொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!