மழைநீரில் தத்தளிக்கும் வட சென்னை: மக்கள் அவதி
2020-11-25@ 14:39:41

சென்னை: நிவர் புயலின் எதிரொலியாக பெய்து வரும் தொடர் கனமழையால் வட சென்னையில் பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் தத்தளிக்கின்றன. சென்னையில் திங்கள் கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையின் தீவிரம் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகள் மழை நீரில் தத்தளிப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 14.82 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. வட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் வரை மழைநீர் தேங்கி உள்ளது.
தொடர் மழையால் சாலையில் தேங்கிய நீர் கடைகள், வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், மின்வெட்டு காரணமாகவும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீடிப்பதால் வெள்ள நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் அங்கங்கே மரங்கள் வேருடன் சாய்ந்தன. முக்கிய சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் லாரி ஒன்று விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். மழைக்கு இடையே அந்த சாலையை சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
மேலும் செய்திகள்
ஆதாரங்களுடன் ரூ.50,000 மேல் பணத்தை எடுத்துச் செல்லலாம்: ஆதாரமில்லாததை ஆணையம் பறிமுதல் செய்யலாம்...ஐகோர்ட் உத்தரவு.!!!
ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!
மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்...! வைகோ வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!
அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்...! உயர்கல்வித் துறை உத்தரவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்