நிதி நிறுவனத்தில் ரூ.50 கோடி மோசடி கோவையில் தாய், மகள் கைது
2020-11-25@ 00:06:17

கோவை: கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (52), இவரது மனைவி பத்மாவதி (45), மகள் சரண்யா (25) ஆகியோர் ஆன்லைன் மூலமாக ‘கிரீன் கிரஸ்ட்’ என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். டெபாசிட் பணத்திற்கு ஒரே ஆண்டில் இரு மடங்கு தொகை கிடைக்கும் எனக்கூறி பொதுமக்களிடம் வசூல் செய்தனர். சில மாதங்களிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணத்தை டெபாசிட் செய்தனர். சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் குவிந்தது. ஆரம்பத்தில் சிலருக்கு இரு மடங்கு தொகை கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் பேசி, அதிகமான தொகையை மீண்டும் டெபாசிட்டாக பெற்றனர். பலருக்கு டெபாசிட் செய்த தொகை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை நகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். 2 மாதத்திற்கு முன் மணிகண்டன் மற்றும் நிறுவன பங்குதாரர் சஞ்சய்குமார் (35) ஆகியோரை கைது செய்தனர். நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த பத்மாவதி, சரண்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Tags:
50 crore fraud in financial institution mother daughter arrested நிதி நிறுவனத்தில்m ரூ.50 கோடி மோசடிm கோவை தாய் மகள் கைதுமேலும் செய்திகள்
பொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை
மூதாட்டியை தாக்கி 10 சவரன், பணம் கொள்ளை
கஞ்சா கடத்தியவர் கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த ₹44 லட்சம் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது
தங்கம் கடத்திய 2 பேர் கைது
சிக்கன் பிரைட் ரைசுக்கு பணம் கேட்டதால் மிரட்டல் ‘அமித்ஷா பிஏவுக்கு போன் போடவா... ஆயிரம் பேரை இறக்குவோம்...’ திருவல்லிக்கேணி பாஜ பிரமுகர் கைது
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்