மின் கம்பங்களை கண்காணிக்க குழு சென்னையில் 52 மீட்பு படைகள் தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
2020-11-25@ 00:05:49

சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் மேகநாத ரெட்டி, தலைமை பெறியாளர் நந்தக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டி: கடந்த 24 மணி நேரத்தில் 5.9 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. 176 நிவாரண மையங்களில் 77 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. ரிப்பன் மாளிகையில் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்கள் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
109 இடங்களில் படகுகள், 176 நிவாரண மையங்கள், 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், 1500 பேருக்கு சமையல் செய்யும் அளவிற்கு தேவையான பொருட்களுடன் 4 பொது சமையல் அறைகள், அம்மா உணவகங்கள், 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்கள் தயார்நிலையில் உள்ளன.மின்சார கம்பம், அறுந்து தொங்கும் மின்கம்பிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகளை மழைக்காலங்களில் சேதமடையாமல் இருப்பதை கண்காணிக்க குழு, 52 இடங்களில் களத்தில் நின்று பணிபுரிய தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் மாநகர பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்நிலையில் உள்ளன என்றார்.
Tags:
Power poles monitoring team Chennai 52 rescue forces ready Minister SB Velumani interview மின் கம்பங்களை கண்காணிக்க குழு சென்னை 52 மீட்பு படைகள் தயார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டிமேலும் செய்திகள்
யோகி பாபு நடித்த மண்டேலா படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: மத தலைவர்கள் உறுதி
எம்ஜிஆர் நகர் மயானம் ஓராண்டு இயங்காது
பிரபல தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி தற்கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை ஒதுக்க அரசு உத்தரவு
நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்