விடுபட்ட இடத்தில் இருந்து 28 முதல் மீண்டும் பிரச்சாரம்: உதயநிதி அறிவிப்பு
2020-11-24@ 21:34:27

தஞ்சை: தஞ்சையில் தனியார் ஓட்டலில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: நான் திமுக இளைஞரணி செயலாளர் ஆக வேண்டும் என்று தஞ்சை திமுக இளைஞரணி தான் முதன் முதலில் தீர்மானம் போட்டு அனுப்பியது. தொகுதிக்கு 40,000 இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை மிஞ்சி செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள். அதிமுக அரசின் ஊழல், கொள்ளை பற்றியும், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் மக்களிடம் விளக்கினேன். நான் 3 நாளாக கைது செய்யப்பட்டு வருகிறேன். எமர்ஜென்சியையே பார்த்தவர்கள் நாங்கள்.
அடிமை அதிமுக அரசு ஆயுதம் தாங்கிய போலீசையும், ஆயுதப்படையையும் நிறுத்தி பயமுறுத்தி பார்த்தது. யாருக்கும் அஞ்சமாட்டோம். தொடர்ந்து பிரசாரம் செய்வேன். புயல் காரணமாக தற்காலிகமாக பிரசாரம் ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல் விடுபட்ட இடத்தில் இருந்து பிரசாரத்தை துவக்குவேன். புயல் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை பொறுத்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். எம்பி தேர்தலில் பெற்றது போல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இளைஞர்கள் கடமை உணர்வோடு செயல்பட்டு வெற்றியை பெற்று தருவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு உதயநிதி பேசினார்.
மேலும் செய்திகள்
பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
4வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கு நெல்லை, தூத்துக்குடியில் மிதக்கும் குடியிருப்புகள்: தண்ணீரை வெளியேற்ற கோரி 4 இடங்களில் சாலைமறியல்
பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் 180வது பிறந்தநாள் விழா
அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்.! 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம்: அலங்காநல்லூர், சிராவயலில் இன்று களை கட்டுகிறது
பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணியளவில் நிறைவு: 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்..!!
அதிமுக ஒப்பந்ததாரரால் கட்டப்பட்ட குடவாசல் அரசு பெண்கள் பள்ளி இடிந்து விழுந்தது: திறப்புக்கு முன் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய பெற்றோர் கோரிக்கை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்