2-ம் கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும்..!! மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
2020-11-23@ 15:37:07

மும்பை: அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். முதல் கட்ட அலையை மக்கள் ஆதரவுடன் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, மக்களுக்கு கொரோனா தொடர்பாக அச்சம் அகன்றுள்ளது குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் டெல்லி, அகமதாபாத் ஆகிய இடங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில் மக்கள் எச்சரிக்கை உடன் விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளார்.
மாநிலத்தின் மக்கள் தொகை 12 கோடி என்றும், 2 முறை தடுப்பூசி போட வேண்டும் என்பதால் மகாராஷ்டிராவுக்கு 25 கோடி தடுப்பூசி தேவைப்படும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி அனைவருக்கும் போட கால அவகாசம் தேவைப்படும் என்பதாலும், அதுவரை மருத்துவ, சுகாதார பணியில் உள்ளவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் மக்கள் கவனமாக செயல்பட உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார். மருத்துவ பணியாளர்கள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை குறையும் நிலையில், யாராலும் நம்பை காப்பாற்ற முடியாது என்றும் மகாராஷ்டிர மக்களை, முதலமைச்சர் உத்தரவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ!: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக் உத்தரவு..!!
பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..!!
தொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!!
100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு!!
விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்