58% பெண்களுக்கு பாலியல் தொல்லை!
2020-11-23@ 15:04:05

நன்றி குங்குமம்
உலக அளவில் சமூக வலைத்தளங்களில் இயங்கும் 58% பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக இந்தியா, பிரேசில், நைஜீரியா, தாய்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த 14 ஆயிரம் பெண்களை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களின் வயது 15 முதல் 25 வரை.
ஆன்லைனில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஐந்தில் ஒரு பெண் சமூக வலைத்தளங்களில் இருந்து முற்றிலுமாக விலகிக் கொள்கிறார் அல்லது அதில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்கிறார். தவிர, பத்தில் ஒரு பெண் தங்களை வெளிப்படுத்தும் விதத்தையே மாற்றிக்கொள்கின்றனர். ஆன்லைன் வழியாக பாலியல் தொல்லை அதிகமாக நடக்கும் இடம் ஃபேஸ்புக். அடுத்து இன்ஸ்டாகிராம். இவற்றுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப், ஸ்நாப்சாட், டுவிட்டரில் குறைவு.
தொகுப்பு: த.சக்திவேல்
மேலும் செய்திகள்
சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை
வாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்கீங்களா?
அனாதையாகும் சொகுசு கார்கள்!
இது ஐரோப்பியப் பஞ்சாங்கம்!
கழுகு வளர்க்கறீங்களா?
பகார்டி: 150 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் மதுபான நிறுவனம்!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!