அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை
2020-11-23@ 00:08:45

சென்னை: சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகருக்கு (54), காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்தனர். கடந்த 11ம் தேதி பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று வார்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி லலிதா மருத்துவர்களிடம் தெரிவித்தார். அதன்படி மருத்துவமனை ஊழியர்கள் மாயமான சந்திரசேகரை தேடினர்.
அப்போது, கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட கட்டிடத்தின் பின்புறம் உடல் முழுவதும் படுகாயங்களுடன் சந்திரசேகர் இறந்தது கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடும் மூச்சு திணறால் சிரமப்பட்ட சந்திரசேகர், மருத்துவமனை கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொரோனா நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Government Multipurpose Hospital 4th Floor Jumping Corona Patient Suicide அரசு பன்னோக்கு மருத்துவமனை 4வது மாடி குதித்து கொரோனா நோயாளி தற்கொலைமேலும் செய்திகள்
நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா?.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!
தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி..: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு
ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!
வெளிநாடுகளில் இருந்து ரூ.1331 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக பதிலளிக்க மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்