திருவில்லிபுத்தூரில் 2 இடங்களில் சாலையை சீரமைக்கக்கோரி நூதன போராட்டம்
2020-11-20@ 12:34:25

திருவில்லிபுத்தூர்: மோசமான சாலையை சீரமைக்க கோரி திருவில்லிபுத்தூர் அருகே நேற்று 2 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தானிலிருந்து நாகபாளையம் விலக்கு வரை வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமாக நிலையில் உள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இவற்றை சீரமைக்க அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அச்சம்தவிர்த்தான் பகுதியிலுள்ள நரியன்குளத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுகந்தி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் ராமகிருஷ்ணாபுரம் புதூர் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். இதில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இரண்டு இடங்களிலும் நடைபெற்ற போராட்டத்தல் பெண்கள் குலவையிட்டு நாற்று நட்டனர். சாலையை சீரமைக்கக்கோரி நடைபெற்ற இந்த நூதனப்போராட்டம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
Tags:
திருவில்லிபுத்தூர்மேலும் செய்திகள்
சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இதுவரை 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!!!!
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!!!
தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
அரசு விழா,பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து: தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்