சுருட்டபள்ளி அணை தடுப்பு உடைந்தது
2020-11-18@ 01:23:23

* 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆரணியாற்றில் நீர்வரத்து * விவசாயிகள் மகிழ்ச்சி
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் சுருட்டபள்ளி அணையின் தடுப்பு உடைந்தது. அதேபோல், ஆரணியாற்றில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் வரத்து அதிகாரித்து காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், ஆந்திர பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் சின்னாப்பட்டு, காரணி வழியாக சுருட்டபள்ளி அணைக்கு வந்து கொண்டிருந்தது. இதனை, அங்குள்ள அணையில் தேக்கி வைக்கப்பட்டது.இதைதொடர்ந்து, அணையில் நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால் கடந்த 29ம் தேதி ஊத்துக்கோட்டையில் 914 ஏக்கர் கொண்ட பெரிய ஏரியான ஈசா ஏரிக்கு வினாடிக்கு 237 கனஅடி வீதம் தமிழக - ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் ஊத்துக்கோட்டை ஏரி நிரம்பியதும், அங்கிருந்து 14 ஏரிகளுக்கு திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால், நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வந்த தண்ணீர் சுருட்டபள்ளி ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அணையின் தடுப்பை நேற்று உடைத்தது. இதையொட்டி, ஆரணியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் தண்ணீர் வரத்து அதிகம் காணப்படுகிறது. மேலும், மழை தொடர்ந்து பெய்து ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதால் இன்று காலை 9 மணியளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது.மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஆற்றில் தண்ணீர் வருவதால், நீர்நிலைகள் உயர்ந்துள்ளன. இதையொட்டி, அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், நேற்று மழை இல்லாததால் பிச்சாட்டூர் ஏரி இன்று (18-ந் தேதி) திறக்கப்படும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்