சென்ட்ரல்-திருப்பதி இடையே 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
2020-11-17@ 00:29:10

சென்னை: சென்னை சென்ட்ரல்-திருப்பதி- சென்ட்ரல் இடையே வரும் 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே முன்பதிவு செய்த சிறப்பு ரயில் (06057) தினமும் காலை 6.25 மணிக்கு புறப்பட்டு அம்பத்தூர், அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு காலை 9.45மணிக்கு சென்றடையும்.
அதைப்போன்று மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து சிறப்பு ரயில் எண் (06008) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா, திருத்தணி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 1.40 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயில் வரும் 19ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
தேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!