சேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஆமை வேகத்தில் நடக்கும் 5வது பிளாட்பார மறுசீரமைப்பு பணி-அடிப்படை வசதியின்றி ரயிலை நிறுத்துவதால் பயணிகள் அவதி
2020-11-06@ 12:25:35

சேலம் : சேலம் ரயில்வே ஸ்டேஷனில் 5வது பிளாட்பார்ம் மறுசீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதால், அனைத்து வேலையும் முடிய இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் ரயில்வே ஸ்டேஷனை ₹20 கோடியில் மேம்படுத்தும் பணி, கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், முன்பகுதியில் புதிய டிக்கெட் கவுன்டர், பயணிகள் தங்கும் அறைகள், அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஓவியம் தீட்டப்பட்ட வண்ண கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், 5வது பிளாட்பாரத்தை மறுசீரமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த பணியை கடந்த 8 மாதத்திற்கு முன் தொடங்கினர்.
ஏற்கனவே இருந்த பிளாட்பார்ம் மேற்கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டது. புதிதாக நவீன முறையில் பிளாட்பார்ம் மேற்கூரை அமைக்கவும், குடிநீர் குழாய்கள், இருக்கைகள், கழிவறைகள் அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை ஆமை வேகத்தில் செய்து வருகின்றனர். இதனால், பிளாட்பார்ம் மேற்கூரை அமைக்க குழி தோண்டி போடப்பட்ட நிலையிலேயே கிடக்கிறது. அதேபோல், 5வது பிளாட்பார்மில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு வரும் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் அமைக்கும் பணியும் மிகவும் மந்தகதியில் நடக்கிறது.
இதனால், 5வது பிளாட்பார்ம் மறுசீரமைப்பு பணி முடிய, இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களை, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத 5வது பிளாட்பார்ம்மில் நிறுத்துகின்றனர். இதனால், அந்த ரயில்களில் வந்து இறங்கும் பயணிகளும், ஏறும் பயணிகளும் கடும் அவதியை தினமும் சந்தித்து வருகின்றனர்.
இதுபற்றி பயணிகள் கூறுகையில், “5வது பிளாட்பார்மில் கட்டுமானப்பணி நடக்கிறது. அதனிடையே கோவையில் இருந்து வரும் ரயில்களையும் நிறுத்துகின்றனர். இதனால், மிக சிரமத்துடன் அந்த ரயிலில் சென்று ஏற வேண்டியுள்ளது. அந்த பிளாட்பார்மில் கழிவறை, குடிநீர், இருக்கை வசதி எதுவுமே இல்லை. அனைத்தும் இனி தான் அமைக்க வேண்டியுள்ளது. அதனால், இனியாவது அந்த பிளாட்பார்மில் ரயில்களை நிறுத்தாமல், மற்ற பிளாட்பார்ம்களில் நிறுத்த வேண்டும். அதேபோல், மறுசீரமைப்பு பணியை வேகமாக செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
மேலும் செய்திகள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!