தாழம்பேடு வளைவு பகுதியில் சாலையில் குவிந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
2020-11-05@ 00:48:37

வாலாஜாபாத்: வாலாஜாபாத் - தாம்பரம் சாலை, தாழம்பேடு வளைவு பகுதியில் குவிந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். வாலாஜாபாத் - தாம்பரம் வரை செல்லும் சாலையை ஒட்டி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் வாலாஜாபாத், ஒரகடம், தாம்பரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள். இதனால் பலர், இரவு பணி முடிந்து பைக்கில் வீடு திரும்புகின்றனர். இந்நிலையில், வாரணவாசி அடுத்த தாழம்பேடு சாலை வளைவில் லாரிகளில் ஏற்றி செல்லப்படும் ஜல்லிக்கற்கள், மணல் சிதறி கிடக்கிறது.
இதனால் அவ்வழியாக பைக்கில் செல்வோர், இரவு நேரங்களில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஜல்லிக்கற்களால் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைகின்றனர். சில நேரங்களில் மண் சரிவில் விழுபவர்கள், பின்னால் வரும் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் சிக்கி படுகாயமடைவதுடன், சில இறப்பு சம்பவங்களும் நடந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதையொட்டி, இரவு பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், மரண பீதியில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்தும் இதுவரை மண் குவியல்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வளைவு பகுதியில் உள்ள மண் குவியல்களை அகற்றி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Tags:
Depression curve area road congestion gravel accident motorists தாழம்பேடு வளைவு பகுதி சாலையில் குவிந்து ஜல்லிக்கற்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்மேலும் செய்திகள்
சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இதுவரை 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!!!!
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.!!!
தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
அரசு விழா,பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து: தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்