பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது
2020-11-01@ 02:09:13

சென்னை: மதுரவாயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சந்தைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. மதுரவாயல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரவாயலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் இருந்த லாரியில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு பார்சல் இறக்கிக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த சிலம்பரசன் (30), ராயபுரத்தை சேர்ந்த சரவணன் (32), தர்மபுரியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்காவை பெரிய பார்சல்களாக எடுத்து வந்து இரவு நேரங்களில் செல்போன், வாட்ஸ் ஆப் மூலம் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குட்கா எடுத்து வந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
Tags:
Bangalore: Three persons have been arrested for seizing 600 kg of Gutka worth Rs 6 lakh from a kidnapper பெங்களூரு கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல் 3 பேர் கைதுமேலும் செய்திகள்
வாணியம்பாடியில் கடனை திருப்பி தராததால் தோல் வியாபாரி கடத்தல்!: 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை..!!
திருச்சி விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்
காரில் எடுத்து வந்த 176 பவுன் நகை பறிமுதல்
திருநின்றவூரில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள காலி நிலம் அபகரிப்பு: 3 பேர் கைது போலீசார் நடவடிக்கை
தியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண்
கஞ்சா விற்றவர்கள் கைது
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!