மானூர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீயால் பரபரப்பு
2020-10-29@ 19:19:52

மானூர்: மானூர் அருகேயுள்ள உக்கிரன்காேட்டை மாெட்டையனூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மின் விநியோகம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. ஆனாலும் மின்மாற்றியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க அதிகாரிகள் முன்வராததால் அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.
அதிகாரிகள் எச்சரிக்கையை தொடர்ந்து முயற்சியை கைவிட்டனர். சம்பவ இடத்துக்கு உக்கிரன்கோட்டை மின்வாரிய அலுவலர் ஆனந்த்ராஜ் மற்றும் ஊழியர்கள் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதிகாலை இச்சம்பவம் நடந்ததால் வீடுகளில் டிவி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பயன் படுத்தவில்லை. இதனால் பாதிப்பு ஏற்படாமல் தப்பியது.
மேலும் செய்திகள்
டிரோன் கேமரா மூலம் 10 இடங்களில் ஆய்வு வெள்ளத்தால் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், வாழைகள் நாசம்: கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை: லாரி டிரைவர் மீது வழக்கு
கொடைக்கானலில் மழை குறைந்தது இயல்பு நிலைக்கு திரும்பிய ‘இளவரசி’: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் தாமதமாகும் கால்வாய் நடைபாதை பணியால் மக்கள் கடும் அவதி
கடலூர் பாதாள சாக்கடை திட்டத்தில் குளறுபடிகள்
கொரோனா காரணமாக சுற்றுலாதலங்களுக்கு தடை புலிமேடு நீர் வீழ்ச்சியை காண குவிந்த பொதுமக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்