ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை
2020-10-29@ 18:21:15

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வரத்தான மாடுகளில் 70 சதவீதம் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகில் வியாழன்தோறும் மாட்டு சந்தை நடக்கிறது. அதன்படி இன்று நடந்த மாட்டு சந்தைக்கு, நேற்று இரவு முதலே ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து மாடுகள் வரத்துவங்கியது. மாடுகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், சந்தையில் வரத்தான மாடுகளில், 70 சதவீதம் விற்பனையானது.
இது குறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில், இந்த வாரம் கூடிய சந்தையில் 300 பசு, 100 எருமை, 60 கன்று என 460 மாடுகள் வரத்தானது. இதில், கறவை மாடுகள் ரூ.30ஆயிரம் முதல் ரூ.65ஆயிரம் வரையும், கன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் மாடுகள் வரத்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.
மேலும் செய்திகள்
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
27 மணி நேரம்..195 நாடு!: பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர், தலைநகரங்களை செதுக்கி கல்லூரி மாணவி சாதனை..!!
பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்களே கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு
தேர்தல் பறக்கும்படை அதிரடி!: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்..!!
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்