விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: அறை இடிந்து தரைமட்டமானது
2020-10-29@ 16:53:29

சிவகாசி: விருதுநகர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை ஒன்று இடிந்து தரைமட்டமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை துலுக்கன்குறிச்சி கிராமத்தில் உள்ளது. 20 அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலையில் நூறுக்கும் மேற்பட் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மருந்து கலவையில் திடீரென உராய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அந்த அறை தரைமட்டமானது. தகவலறிந்து வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ பிற இடங்களுக்கு பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். காலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் செய்திகள்
தமிழக அரசின் சார்பில் வெளிநாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் தகவல்
பள்ளிகளை திறக்காததால் கூலி வேலைக்கு செல்லும் கிராமப்புற மாணவர்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை..!
ஊட்டியில் மழை குறைந்ததால் ஏரியில் மிதி படகு சவாரி மீண்டும் துவக்கம்
சிவகங்கை அருகே ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம்: ஒரு எலுமிச்சை ரூ.5100: கோயில் விழாவில் நடந்த ஏலம்
நீதித்துறையை கொச்சைப்படுத்தியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது வக்கீல்கள் போலீசில் புகார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்