அந்தமான் விமானத்தில் இயந்திர கோளாறு: 186 பேர் தப்பினர்
2020-10-29@ 16:32:47

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 181 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 186 பேர் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தார். உடனே அவசரமாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன.
அதன்படி காலை 6.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 186 பேரும் உயிர் தப்பினர். பின்பு பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுதுபார்க்கும் பணி நடக்கிறது. இதற்கிடையே பயணிகளை மாற்று விமானத்தில் அந்தமான் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு நடக்கின்றன. தகுந்த நேரத்தில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18-ம் தேதி திறக்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.33 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
பிப்ரவரி 2-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! ஆளுநர் உரையுடன் தொடங்கும்: பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்
இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.: முதல்வர் அறிக்கை
உயிரிழந்த மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி...! தகுதி அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!