வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை..!!
2020-10-29@ 15:45:17

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக நவம்பர் 3ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தான், சிறப்பு முகாம் அமைப்பது மற்றும் வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர்கள் இருப்பது, பெயர்கள் திருத்தம், நீக்கம் மற்றும் பூத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் கருத்துக்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிப்பார்கள். இதற்கு பின்பாக சிறப்பு முகாம்களும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையமானது, அதற்கான தேதியை அறிவிக்கும். அதற்கு முன்பாக நவம்பர் 3ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து தான், தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட ஜனவரி 20ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இரட்டை பதிவுகளை நேரடியாக சென்று நீக்குவது மற்றும் பல்வேறு பிரச்சனைகள் இருப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!!!
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!