200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலை புனரமைக்க வலியுறுத்தல்
2020-10-29@ 13:03:46

அந்தியூர்: அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் கவுந்தப்பாடி செல்லும் ரோட்டில், தண்ணீர் டேங்க் அருகே முனியப்பன் கோயில் வீதியில் 200 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சாமி கிராம தேவதையாக ஆப்பக்கூடல், புதுப்பாளையம், கரட்டுப்பாளையம், நாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த மக்களுக்கு தொய்வமாக விளங்கி வந்ததுள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்பு திருவிழா நடத்தப்பட்டு, அதன் பின்னர் நீண்ட வருடங்களாக இக்கோயில் திருவிழா நடத்தப்படாமலேயே இருந்துள்ளது. பின்னர் ஊர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கடந்த 2009ல், திருவிழா நடத்தினர். அதுவே இறுதியாக நடத்தப்பட்ட திருவிழாவாக மாறியது. அதனையடுத்து பழமை வாய்ந்த இக்கோயில் சிதலமடையத் துவங்கியது. இதனை புனரமைப்பு செய்து மீண்டும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திருவிழா நடத்திவிடலாம் என்று முயற்சி செய்து அதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களில் நீண்ட வருவடங்களாக நாடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. பழமை வாய்ந்த கோயில் பாழடைந்த நிலையில் உள்ளதால் தற்போது அக்கோவிலில் மணல்மேட்டில் கட்டியுள்ளதால் நாளடைவில் கோயிலின் பின்புறப்பகுதி அப்படியே மணலுக்குள் புதைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அதிகாரிகளின் மெத்தனத்தால் மணலுக்குள் புதைந்து வரும் கோவில், இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இக்கோவிலை ஆய்வு செய்வதற்காக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சுற்றுச்சுழல்துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் சென்றனர். பழமையான கோயிலை புனரமைப்பு செய்து திருவிழா கொண்டாட வேண்டும் என பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அதைச்சார்ந்தவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
டிரோன் கேமரா மூலம் 10 இடங்களில் ஆய்வு வெள்ளத்தால் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், வாழைகள் நாசம்: கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி படுகாயமடைந்த யானைக்கு தொடர் சிகிச்சை: லாரி டிரைவர் மீது வழக்கு
கொடைக்கானலில் மழை குறைந்தது இயல்பு நிலைக்கு திரும்பிய ‘இளவரசி’: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் தாமதமாகும் கால்வாய் நடைபாதை பணியால் மக்கள் கடும் அவதி
கடலூர் பாதாள சாக்கடை திட்டத்தில் குளறுபடிகள்
கொரோனா காரணமாக சுற்றுலாதலங்களுக்கு தடை புலிமேடு நீர் வீழ்ச்சியை காண குவிந்த பொதுமக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்