தர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
2020-10-29@ 01:12:57

தர்மபுரி: தர்மபுரி திமுக எம்பிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி தொகுதி எம்பியாக திமுகவை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் உள்ளார். இவரது இணைய தள முகவரிக்கு பத்மபிரியா என்பவர் பெயரில், ஒரு செய்தி வந்துள்ளது. அதை செந்தில்குமார் எம்பி, படித்து பார்த்த போது, எம்பியை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் வாசகங்கள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில் இணைய வழியில் வந்த செய்தியில், தன்னை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர் யார் என்பது குறித்து விசாரித்து கண்டறிய வேண்டும் என கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தர்மபுரி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Dharmapuri DMK MP death threat cyber crime police investigation தர்மபுரி திமுக எம்பி கொலை மிரட்டல் சைபர் கிரைம் போலீசார் விசாரணைமேலும் செய்திகள்
மது அருந்தும்போது மோதல் பைக்குகள் தீ வைத்து எரிப்பு
டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை மிரட்டி ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: 2 பேர் கைது
வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி
கர்ப்பிணி தற்கொலை ஆர்டிஓ விசாரணை
நடுரோட்டில் மனநலம் பாதித்த வாலிபர் ரகளை
30 நிமிடத்தில் ரூ.3,000 சம்பாதிக்கலாம் : மோசடி கும்பல் 12 பேர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்