குமரியில் டாக்டர் தற்கொலை விவகாரத்தில் டி.எஸ்.பியை காப்பாற்ற போலீஸ் அதிகாரிகள் முயற்சி: விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை
2020-10-29@ 01:06:50

நாகர்கோவில்: குமரியில் டாக்டர் தற்கொலை விவகாரத்தில் டி.எஸ்.பி.யை காப்பாற்ற அதிகாரிகள் முயற்சி செய்வதால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவிலை அடுத்த பறக்கை அருகே இலந்தவிளை பகுதியை சேர்ந்த திமுக மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் சிவராம பெருமாள் (43), கடந்த 26ம்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், இலந்தவிளையை சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர் காரணம் என கூறி இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி. மணிமாறன், ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி. சாஸ்திரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் சிவராம பெருமாள் மனைவி, உறவினர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூறுகையில், டி.எஸ்.பி. பாஸ்கரன் மிரட்டியதே தற்கொலைக்கு காரணம் என சிவராம பெருமாள் தெளிவாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதம் நடந்தது என கூறி பிரச்னையை திசை திருப்ப காவல்துறை அதிகாரிகள் முயல்கிறார்கள். டி.எஸ்.பி. பாஸ்கரனை பணியில் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. டி.எஸ்.பி.யின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். உள்ளூர் போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றனர். இது குறித்து எஸ்.பி. பத்ரிநாராயணன் கூறுகையில், உரிய விசாரணை நடந்து வருகிறது. தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:
In Kumari in the case of Dr. Suicide the police officers try to save the DSP the CPCIT the request to change the investigation குமரியில் டாக்டர் தற்கொலை விவகாரத்தில் டி.எஸ்.பியை காப்பாற்ற போலீஸ் அதிகாரிகள் முயற்சி விசாரணையை சிபிசிஐடி மாற்ற கோரிக்கைமேலும் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!