10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி: அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு..!!
2020-10-28@ 15:27:55

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பது குறித்த அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், 39,000 பேர் 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய நிலையில் சுமார் 8,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல, 10ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வழக்கும் தொடர்ந்தனர். இதனையடுத்து, பள்ளி மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதன்பிறகு, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டது. அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், இன்று தனித்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வில் 39 ஆயிரம் பேர் தனித்தேர்வு எழுதிய நிலையில் 22 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், 12ம் வகுப்பு தனித்தேர்வில் 40 ஆயிரம் பேர் தனித்தேர்வு எழுதிய நிலையில் 12 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அமித்ஷா கையில் தலையாட்டி பொம்மை: ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்
தொடரும் இழுபறி!: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை..!!
பாலியல் சர்ச்சை விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு உதவிய உயர் அதிகாரிகள்: முதல் தகவல் அறிக்கையில் அம்பலம்
சட்டமன்ற தேர்தல் 2021!: அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல்...ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவிப்பு..!!
3 மாதங்களில் 225 உயர்வு: காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்