வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி :உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
2020-10-28@ 08:06:59

புதுடெல்லி,: வேளாண் சட்டத்தை உடனடியாக செயல்படுத்தக்கோரி அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அதொடர்பான வழக்குகளை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கு வசதியாக இந்த மசோதா வழி வகுக்கும் என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கிவிட்டதால் தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இது விசாயிகளுக்கு முற்றிலும் எதிரான சட்டம் எனக்கூறி தமிழகம் உட்பட நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பிலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவி போனியா உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,'நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை நாடு முழுவதும் உடனடியாக செயல்படுத்தக்கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதேப்போன்று பல்வேறு அமைப்புகள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து உத்தரவில்,' மேற்கண்ட விவகாரம் அரசு சார்ந்த திட்டம் என்பதால் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் புதிய பிரச்சனைகள் ஏற்படும் விதமாக வழிவகை அமைந்து விடும் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் தரப்பில் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்?.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.!!!
'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .
2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!