டிசம்பரில் செமஸ்டர் தேர்வு தொடங்கும் நிலையில் புதிதாக தொடங்கிய 10 அரசு கலைக்கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் அச்சம்
2020-10-28@ 01:04:22

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 10 அரசு கலை கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்தபடவில்லை. இதனால் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வுகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தென்காசி, அரியலூர், கோயம்பத்தூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 பெண்கள் கல்லூரி உட்பட மொத்தம் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இக்கல்லூரிகளில் பாடம் நடத்த மொத்தம் 170 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு கல்லூரிகளிலும் தலா 5 பட்டபடிப்புகளுக்கான 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தததால் சுமார் 75% முதல் 95% இடங்கள் நிரம்பின. ஆனால் இதுவரை போதுமான ஆசிரியர்களை நியமிக்காத காரணத்தால் இக்கல்லூரிகளில் படிக்கும் 2 ஆயிரம் மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது வரை ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மற்ற அரசு கல்லூரிகளில் ஒரு மாதமாத்திற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவரும் நிலையில் இக்கல்லூரிகளில் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவே இல்லை. இந்த நிலையில் பல்கலைகழகங்கள் வரும் டிசம்பர் மாதம், முதல் பருவத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றன. சில பல்கலைகழகங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை பதிவேற்றுமாறு கல்லூரிகளிடம் கேட்டுவருகின்றன. பாடமே நடத்தாமல் எவ்வாறு இன்டர்நல் தேர்வு நடத்தி அகமதிப்பீடு வழங்க முடியும் என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்களோ, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள முதல் பருவத்தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்ற அச்சத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
கடன் வாங்காத மாநிலமே இல்லை: பல்வேறு சோதனைகளைத் தாண்டி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன்...முதல்வர் பழனிசாமி பேட்டி.!!!
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!
அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!
ஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறும் சூரரைப் போற்று... சிறந்த படம், நடிகர், நடிகை ஆகிய 3 பிரிவுகளில் பரிந்துரை: படக்குழுவினர் மகிழ்ச்சி!!
புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்: தா.பாண்டியன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!