ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
2020-10-28@ 00:43:23

அண்ணாநகர்: வில்லிவாக்கம் திருவீதியம்மன் கோயில் 2வது தெருவை ஆக்கிரமித்து 32 குடும்பங்கள் கடந்த 15 வருடங்களாக வசித்து வந்தனர். இந்நிலையில், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கத்தை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக, இங்குள்ள வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து, இவர்களுக்கு அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மண்டல பொறுப்பு அதிகாரி வைத்தியலிங்கம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த தெருவில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தி, அம்பத்தூர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்!: ஊர்வலமாக சென்று திமுக-வினர் அஞ்சலி..உதயநிதி, ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
சென்னையில் குடியரசு விழா கோலாகலம்!: மின்னொளியில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்...இரவிலும் பட்டொளி வீசிப் பறந்த மூவர்ணக்கொடி..!!
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்