வியாபாரியை தாக்கி கொள்ளை
2020-10-28@ 00:07:20

புழல்: சோழவரம் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சிவகணேசன்(40). சோழவரம் ஜிஎன்டி சாலை மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை கடையை திறக்க வந்தபோது கடையில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே வந்தார். அவரை தடுத்துநிறுத்தி கேட்டபோது, அந்த நபர் சிவகணேசனை பலமாக தாக்கியதோடு, கண்ணாடி பாட்டிலை உடைத்து அவரை குத்த முயன்றார். இதனால், பயந்துபோன சிவகணேசன் தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் காலை 10 மணி அளவில் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.5,000, புதிதாக விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து மழைகோட், புதிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அந்த நபர் திருடி சென்றது தெரிந்தது.
மேலும் செய்திகள்
30 நிமிடத்தில் ரூ.3,000 சம்பாதிக்கலாம் : மோசடி கும்பல் 12 பேர் கைது
மூதாட்டி கொலை இருவர் கைது
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
எளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்
சூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்