முதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு
2020-10-27@ 19:10:52

பாட்னா: பீகாரில் அம்மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் 3 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று முசாபர்பூரில் நடந்த பேரணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, அப்பகுதியில் இருந்து ஒருவர் திடீரென ஹெலிகாப்டர் நோக்கி தனது செருப்பை வீசினார்.
மேலும், நிதிஷ்குமாருக்கு எதிராக ஏராளமான இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார், நிதிஷ்குமாரை மாற்று வழியாக அழைத்து சென்றனர். இவ்விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்வரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீசிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
FasTag முறையால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்!: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!!
சென்னை தி.நகரில் இல்லத்தில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!
வீரியம் குறையாத கொரோனா!: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேர் பாதிப்பு..மேலும் 91 பேர் உயிரிழப்பு..!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை
முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்..? டெல்லி எல்லையில் 100-வது நாளை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்