முதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு
2020-10-27@ 19:10:52

பாட்னா: பீகாரில் அம்மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் 3 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று முசாபர்பூரில் நடந்த பேரணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, அப்பகுதியில் இருந்து ஒருவர் திடீரென ஹெலிகாப்டர் நோக்கி தனது செருப்பை வீசினார்.
மேலும், நிதிஷ்குமாருக்கு எதிராக ஏராளமான இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார், நிதிஷ்குமாரை மாற்று வழியாக அழைத்து சென்றனர். இவ்விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்வரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீசிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது..! கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு
அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறி 2 மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்து பேராசிரியர் தம்பதி வெறிச்செயல் சித்தூர் அருகே கொடூரம்
முதலமைச்சர் பதவியில் இருந்து எந்த நேரத்திலும் நீக்கப்படலாம்!: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அதிருப்தி குரலால் அதிர்ச்சி..!!
ஒரே நாளில் 13,203 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.53 லட்சம் பேர் பலி..!!!
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு தெரியாமல் புதிய ஆப்களை பயன்படுத்தும் பாக். தீவிரவாத அமைப்புகள்: குறைந்த இன்டர்நெட்டிலும் வேகமாக செயல்படும்
முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு: கேரள அரசு அதிரடி
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்