சூனாம்பேடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
2020-10-27@ 00:18:34

செய்யூர்: சூனாம்பேடு அருகே தனியார் பஸ் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 18 பேர் தனியார் பஸ்சில் நேற்று மதியம் புறப்பட்டனர். செய்யூர் அருகே சூனாம்பேடு அடுத்த ஈசிஆர் சாலை கப்பிவாக்கம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு ஓடி நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், பஸ்சில் பயணம் செய் ஒரு வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள், ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். லேசான காயமடைந்தவர்களை, அருகிலுள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், ஈசிஆர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
Tags:
Tsunami private bus overturns accident children 4 people injured சூனாம்பேடு தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து குழந்தைகள் 4 பேர் படுகாயம்மேலும் செய்திகள்
காவேரிப்பாக்கத்தில் ரூ3 கோடியில் அமையும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது?.. பொதுமக்கள் கேள்வி
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!